Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை முதல் பள்ளிகள், அரசு அலுவலங்கள் மூடல்... காரணம் இதுதான்...!!

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 10:10 [IST]
நாளை முதல் பள்ளிகள், அரசு அலுவலங்கள் மூடல்... காரணம் இதுதான்...!!Representative Image.

Sri Lanka: கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் போக்குவரத்து முடக்கம், மின் உற்பத்தி பாதிப்பு போன்ற சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. 

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவித்துள்ளது. மேலும், சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதேபோல், பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. மோசமான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்