Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை...ஆட்சியர் உத்தரவு..!

madhankumar July 06, 2022 & 08:58 [IST]
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை...ஆட்சியர் உத்தரவு..!Representative Image.

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் SP அம்ரித்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மறுபாடுகாரணமாக அநேக இடங்களில் 3 முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதி வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும், இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நீலகிரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் SP அம்ரித்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்