கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்வும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இச்சம்வத்தை பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…