செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து இஎஸ்ஐ மருத்துவர்கள் குழு பரிசோதித்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி தொடர்பாக துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இஎஸ்ஐ மருத்துவர்கள் குழு அவரை பரிசோதித்தது. அந்தக் குழு துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தியால் அனுப்பப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இ.எஸ்.ஐ.மருத்துவமனை இயக்குனரும், துர்கா ஸ்டாலினின் தம்பியுமான மருத்துவர் ராஜமூர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது கட்டுப்பாட்டில் இயங்கும் இ.எஸ்.ஐ.மருத்துவமனைகளில் இதய சிகிச்சை நிபுணர்களே கிடையாது. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இருதய பரிசோதனை நடத்திய இ.எஸ்.ஐ. மருத்துவர்களுக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு இருதய பரிசோதனை நடத்த சென்ற இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்றவர்கள். அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடியது . மருத்துவமனையின் டீனாக இருப்பவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். இ.எஸ்.ஐ.யில் இயக்குநராக பணியாற்றினாலும் எனது நிர்வாகத்தின் கீழ் 7 மருத்துவமனைகள் மட்டுமே வருகிறது. எனது நிர்வாகத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை பிரிவே கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதான் உண்மை நிலவரம் என்றும், யூடியூப் சேனலில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த இ.எஸ்.ஐ. மருத்துவர்களை அனுப்பியது நான்தான் என்று கூறுவது அவதூறானது, புரளியானது என்றும் அந்த வீடியோவில் ராஜமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…