Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்..!

Baskarans Updated:
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்..!Representative Image.

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமனம் செய்தது. இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக யார் நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கடந்த22ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணிமூப்பு அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் 13அதிகாரிகள் இருந்ததால், அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்