Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லால் பகதூர் சாஸ்திரி போல் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - சரத் பவார் கோரிக்கை

Priyanka Hochumin Updated:
லால் பகதூர் சாஸ்திரி போல் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - சரத் பவார் கோரிக்கைRepresentative Image.

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஒடிசா பாலசோர் பகுதியில் நடந்த கோர விபத்தில் 288 பேருக்கு மேல் உயிரிழந்தனர், 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் பெரிய ரயில் விபத்து நடைபெற்றது. அதற்கு பின்னர் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவரின் அந்த முடிவிற்கு ஜவஹர்லால் நேரு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இது என்னுடைய பொறுப்பு என்று கூறி ராஜினாமா செய்தார் சாஸ்திரி. அதே போல தற்போது இந்த ரயில் விபத்து நடைபெற்றது, அதற்கு சம்மந்தமான அரசியல்வாதிகள் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்