சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சஞ்சய் ரெளத் மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கு தொடர்பாக வீட்டில் நடத்திய சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சஞ்சய் ரெளத்தை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரிடம் 9மணி நேரம் நடத்திய விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் சஞ்சய் ரெளத் எம்பி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…