Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுபான விடுதியில் 9 பேர் சுட்டுக்கொலை..  மெக்சிகோவில் பரபரப்பு...

Nandhinipriya Ganeshan November 11, 2022 & 10:07 [IST]
மதுபான விடுதியில் 9 பேர் சுட்டுக்கொலை..  மெக்சிகோவில் பரபரப்பு...Representative Image.

மெக்சிகோ: அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென ஆயுதம் ஏந்திய கும்பல் புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த 5 ஆண்களும், 4 பெண்களும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். 

அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும், துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் இதேபோல், இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அரங்கேறி வரும் கும்பல் வன்முறையால், மெக்சிகோ மக்கள் பீதியில் இருக்கின்றனர். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்