கனமழை காரணாமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000/- வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நவம்பர் 24 ஆம் தேதி முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்ததாக கூறப்படுகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்து மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் அறிவித்தார். அதனால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை காட்டி ரூ. 1000/- வாங்கிக்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…