தர்மபுரி மாவட்டத்தில் வெறும் 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கோட்டை பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. உடனே போலி மருந்து தடுப்பு குழுவினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திற்கு இந்த தகவலை தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் உதவியாளர்களுடன் நாய்கன்கோட்டை பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் கண்ணனை விசாரணை செய்ய சென்றுள்ளனர். அங்கு கண்ணனின் உரிமை மற்றும் ஆவணங்களை சோதனை செய்த போது அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையின் போது 60 வயதான கண்ணன் என்பவர் பத்தாம் மட்டுமே படிந்திருப்பதை ஒப்புக்கொண்டார். அது மட்டும் இன்றி தன்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோமியோ மருத்துவம் எடுத்துக்கொண்டார். அவருடன் பார்க்க வந்த போது அதனை கற்றுக்கொண்டதாகவும், தந்தை மறைவுக்கு பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஊசி, மருந்து, மாத்திரை ஆகியவைற்றை கைப்பற்றினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…