நீங்கள் சாலைகளில் நடந்துகொண்டிருக்கும் பொது உங்களுக்கு மேலே உள்ள வானம் பச்சை நிறத்தில் மாறினால் எப்படி இருக்கும்.
இந்த நிலைதான் தற்போது அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் நடந்துள்ளது, இதனை பார்த்த அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என மக்கள் புலம்பி வருகின்றனர்.
அமெரிக்காவின், தெற்கு டகோடா மாகாணத்தில் உள்ள சியோக்ஸ் நீர்வீழ்ச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், டெரெகோ என்ற சக்தி வாய்ந்த புயல் வீசியது தான், வானம் இப்படி பச்சை வண்ணத்தைப் பூசிக் கொண்டு வேடிக்கை நிகழ்த்தியதற்கு காரணம் என்கிறார்கள் வானவியல் அறிஞர்கள். இப்படி வானம் பச்சை வண்னத்திற்கு மாறிய புகைப்படங்களை சமூக வலைதளங்ககளில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து தேசிய வானிலை சேவை (NWS) ஆய்வாளர் கருத்து தெரிவிக்கையில், சூரியனின் சிவப்பு ஒளிக் கதிர்கள் புயலில் உள்ள நீர் அல்லது பனியுடன் சேர்ந்து இடியுடன் கூடிய மேகங்கள் பச்சை நிறத்தில் மாறும் என கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…