தூக்கத்தில் ஆடு வெட்டுவதாக கனவு கண்டு தனது பிறப்புறுப்பை வெட்டிக் கொண்ட சம்பவம் ஆப்பிரிக்க நாடான கானாவில் அரங்கேறியுள்ளது.
ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த 47 வயதான கோஃபி அட்டா, இரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது தனது பிறப்புறுப்பில் இருந்து கடுமையான வலியை உணர்ந்ததால், அதிர்ச்சியில் கண் முழித்துள்ளார்.
அப்போது தான் அவருக்கு தான் தூக்கத்தில் ஆடு வெட்டுவதாக நினைத்து தனது பிறப்புறுப்பை வெற்றிகொண்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்காக நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லாததால், தற்போதைக்கு உள்ளூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பேசிய கோஃபி அட்டா, தான் எப்படி கத்தியைப் பிடித்தேன் என்று இன்னும் தெரியவில்லை என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…