Delhi News Live : டெல்லி நிஜாமுதீனிலிருந்து புறப்பட்ட ரயிலை யாரோ கடத்தி விட்டதாக பயணி ஒருவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து போபால், குர்னூல், கோப்பால், வழியாக யஷ்வந்தபூர் செல்லும் YPR Sampark KRT (12650) எக்ஸ்பிரஸ் வழக்கம்போல நேற்று நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டது.
இந்நிலையில், வழக்கமாக செல்லும் வழித்தடம் வழியாக செல்லாமல் வேறு ரயில் நிறுத்தங்கள் வழியாக சென்றுள்ளது.
இதனையடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்த பயணி அதிர்ச்சியில் தனது ட்விட்டரில் ரயிலை யாரோ கடத்தி செல்வதாகவும், உடனடியாக உதவுமாறு ஐஆர்சிடிசி மற்றும் செகந்திராபாத் ரயில்வே கோட்டத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள செகந்திரபாத் ரயில்வே கோட்டம், “காஸிபேட்டா – பால்ரசா இடையே ரயில் தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், யாரும் ரயிலை கடத்தவில்லை, அதுகுறித்த பீதியடைய வேண்டாம்” என பதிலளித்துள்ளனர்.
மேலும்ல், இது தொடர்பாண ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…