Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா..? இது உங்களுக்குத் தான்!!

Sekar September 11, 2022 & 15:32 [IST]
பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா..? இது உங்களுக்குத் தான்!!Representative Image.

பொங்கல் பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 12ஆம் தேதி) தொடங்கும் என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இதில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

தொழில் மற்றும் வேலை ரீதியாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையின்போது தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக, ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை நாட்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும் என்பதால், காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கவும், கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்