Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவசாயத்திற்காக மூன்று மடங்கு அதிகம் செலவு: பிரதமர்

Baskarans Updated:
விவசாயத்திற்காக மூன்று மடங்கு அதிகம் செலவு: பிரதமர் Representative Image.

டெல்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.5லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி 17ஆவது கூட்டுறவு மாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் 3600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மாநாட்டில் பிரதமர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.5லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் பலனடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் விவசாயத்திற்காக ரூ.90ஆயிரம் கோடி செலவிட்டனர். பிரதம  மந்திரியின் கிஷான் திட்டத்திற்கு மட்டும் மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளோம். 9ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70ஆயிரம் கோடி மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைக்க வேண்டும். இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்