Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழக கடற்கரையில் மயங்கி கிடந்த இலங்கை அகதிகள்..!

madhankumar June 27, 2022 & 18:46 [IST]
தமிழக கடற்கரையில் மயங்கி கிடந்த இலங்கை அகதிகள்..!Representative Image.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துவருகின்றனர். அவ்வாறு இந்தியாவிற்குள் நுழைய தமிழக கடற்கரை பகுதிகள் வழியாக படகுகள் மூலம் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில்  இலங்கையைச் சேர்ந்த வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவர் தனுஷ்கோடி அருகே  கோதண்டராமர் கடற்கரைப் பகுதிக்கு  அகதிகளாக பைபர் படகில் வந்து இறங்கி உள்ளனர்.  

உணவு தண்ணீர் இல்லாமல் மயங்கி கிடந்த அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு உணவு தண்ணீர் கொடுத்து விசாரணைக்கு பின்னர் அகதிகள் முகாமில் கொண்டு விட்டனர். ஏற்கனவே  90 பேர்  அகதிகளாக வந்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மேலும்தமிழகம் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை நிவாரண உதவிகளை கப்பல் மூலமாக அனுப்பி வைத்துள்ளது, மேலும் மூன்றாவது முறை அனுப்ப முடிவு செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்