கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் பிரபல யுடியுப் சேனல் ஒன்று தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்ரீமதியின் தாயார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது பெற்றோர் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக சென்னையில் இருக்கும் ஸ்ரீமதியின் தாயார் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரையும் சந்தித்து நீதி கிடைக்கவும், ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வரவும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமதியின் தாயார், The K TV எனும் யுடியுப் சேனல் மாணவி ஸ்ரீமதி குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவரை கைது செய்வதோடு, அவர் வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…