விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் தமிழகத்தில் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா ஜூலை 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து, இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷமிட்டனர்.
மேலும், ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற்றதால் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…