இந்தியாவில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதியானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவது காலியாக உள்ள 57 இடங்களுக்கு இன்று ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…