Andaman Latest News : அந்தமான் தீவு அருகே வங்கக்கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளய்து.
இந்தியாவில் பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வழக்கமாகி வருகிறது. அதன்படி, அந்தமான் தீவு அருகே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சற்று முன் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,. மேலும் இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அந்தமான் நிகோபார் தீவின் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து 302 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படுமா,,? என்ற கேல்வியும் எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…