Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ...ஓட்டம் பிடித்த பயணிகள்..!

madhankumar July 03, 2022 & 12:56 [IST]
எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ...ஓட்டம் பிடித்த பயணிகள்..!Representative Image.

இந்தியாவில் கொரோனாவிற்கு பின்னர் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் தெலுங்கானா செகந்திராபாத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு  தட்சிண எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் நேற்று நள்ளிரவுக்கு பிறகு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நேற்று இரவு செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த தட்சிண எக்ஸ்பிரஸ் ரயில் கடைசியில் உள்ள லக்கேஜ்கள் இருக்கும் பெட்டிகள் தீப்பிடித்து எரிய தொடங்கின. நெருப்பு பரவுதை அறிந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்  அந்த பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாயின. அதன் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்