Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

14 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்....கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம்..!

madhankumar May 27, 2022 & 15:54 [IST]
14 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்....கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம்..!Representative Image.

கழிவு நீர் கலந்த குடிநீரை அருந்திய 14பேருக்கு வாந்தி மயக்கம், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 10-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் அவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். உடனடியாக மருத்துவ குழு காரைக்கால்மேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டது. கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதே, வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்