Kodaikanal Latest News : தமிழகத்தில் மலைகளின் அரசி கொடைகானலில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கோடை விழா கொண்டாடப்படும். இந்ண்ட்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொடைக்கானல்
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இதை மலைகளின் அரசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கொடைக்கானல் நோக்கி பயணித்து வருகின்றனர்.
கோடை விழா
தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலா பயணிகள் பல மாநிலங்களில் இருந்து கொடைக்கானல் செல்கின்றனர். இந்த ஆண்டு கோடை விழா மே 24ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சிகள்
இந்த ஆண்டு கோடை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…