Quad : இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 24-ம் தேதி குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மோடி கலந்து கொள்கிறார்.
குவாட்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது. மேலும் 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் நான்கு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
குவாட் உச்சி மாநாடு
இந்நிலையில், 24-ம் தேதி குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளர்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன் ஆகிய தலைவர்கள் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம்
இந்தோ - பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து அணைத்து தலைவர்களும் குவாட் உச்சிமாநாட்டில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…