Sri Lanka : இலங்கையில் வரலாறு காணாத அளவிற்க்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக இரண்டாவது கட்டமாக உதவிப் பொருட்கள் அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில், கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி எழுந்த நிலையில் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் விளவாக இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். இதனையடுத்து, இலங்கைக்கு புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
இந்நிலையில், இலங்கை மக்கள் உணவுப் பொருட்களுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டபோது தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இலங்கை மக்களுக்காக தமிழக மக்கள் பலரும் முதல்வர் நிதியில் பணம் அளித்தனர். மேலும், இலங்கையில் விரைவில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐ.நா அறிவித்துள்ளது. இதனால் இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக உணவு பொருள் அனுப்ப திட்டமிட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உதவிப்பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…