Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளிமாநில மாணவ-மாணவியருக்கு தமிழகம் பாதுகாப்பு அரண்..! ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்..!!

Saraswathi Updated:
வெளிமாநில மாணவ-மாணவியருக்கு தமிழகம் பாதுகாப்பு அரண்..! ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்..!!Representative Image.

வட கிழக்கு மாநிலத்தில் இருந்து கல்வி கற்க மாணவிகளை பெற்றோர்கள் நம்பி அனுப்புவதற்கு காரணம்,  தமிழகம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதால்தான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய உடை அணிந்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற  கலாச்சார அணிவகுப்பு, நடனம்  உள்ளிட்ட  கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் பார்த்து ரசித்தார்.  

விழாவில் பேசிய  அவர், வட கிழக்கு மாநிலத்தில் இருக்கும் பெற்றோர்கள்,  தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க தமிழகத்திற்கு அனுப்புவதில் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். குறிப்பாக பெண்களை நம்பி அனுப்புவார்கள். காரணம், தமிழகத்தில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால்தான். தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒருங்கிணைந்து சமூக வலைதளம் மூலம் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்.  

இவ்வாறு ஆளுநர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்