Tamilnadu News Live : தமிழகத்தில் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களிடத்தில் ஓபிஎஸ் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு ஜூலை 11ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஓபிஎஸ் அணி டெல்லி சென்று அங்கு தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனுக்களை அளித்துள்ளனர். மேலும் தற்போது சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் அதிமுகவில் நடந்து வரும் குழறுபடிகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பயணித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…