11 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2017 முதல் 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அது தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்காததால், அதை ரத்து செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு ரத்தாகலாம் என குஷியில் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இது குறித்து யாரும் குழம்ப தேவையில்லை. வேலைவாய்ப்பு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு 11 ஆம் வகுப்பு பாடங்களும் முக்கியம்.
மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. தமிழகத்தில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது." எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…