தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், உயிருள்ள வரை உழைப்பேன் எனக் கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று தனது சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
#LIVE: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/7VMn3xcQkT
— M.K.Stalin (@mkstalin) August 26, 2022
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பண்டைய சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து கூறி தனது உரையைத் தொடங்கினார்.
பின்னர் ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த ஓராண்டில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைத்து மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சிக்காக உயிருள்ள வர உழைத்துக் கொண்டே இருப்பேன் எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…