Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள்..! பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

Saraswathi Updated:
திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள்..!  பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!Representative Image.

திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள், திமுகவினர் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமலாக்கத்துறை சோதனையின்போது, அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்தும், அவரை தீவிரவாதிபோல் அடைத்து வைத்து விசாரிப்பதா? என கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை என்றும்,  பாஜக ஆளும் மாநிலங்களை வருமானவரித்துறைக்கோ, புலனாய்வுத்துறைக்கோ, அமலாக்கத்துறைக்கோ தெரியாது என்றும் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்தியில் ரீதியாக, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி. ஜனநாயக விரோதப் பாணியைத் தான் இந்தியா முழுவதும் பாஜக பின்பற்றி வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறையை வைத்து பாஜக அரசியல் செய்வதாகக் கூறியுள்ள அவர், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தி எதிர்ப்பு, மிசா காலங்களில் திமுக நடத்திய போராட்டங்களைப் பற்றி வரலாற்றைப் புரட்டி தெரிந்துகொள்ளுங்கள். மிரட்டி பணி வைக்க நினைத்தால் குனியமாட்டோம். நிமிர்ந்து நிற்போம் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்றும், திமுகவையும், திமுகவினரையும் சீண்டிப் பார்க்க வேண்டாம், திமுக திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்றும் மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியஅரசை  ஆளுகின்ற பொறுப்பில் உள்ள பாஜக, ஏதேச்சதிகாரத்தை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும், அதற்கு தொண்டர்களுக்கு உறுதுணையாக தாமும், தமக்கு உறுதுணையாக தொண்டர்களும் இருப்பார்கள்  என்றும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்