பொதுமக்கள் எந்த நேரத்திலும் இணைய வழியில் எளிமையாக பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
வருவாய் துறை சார்பில் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தற்போது மக்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் விண்ணப்பித்து, பின்னர் அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வசதியை மேலும் எளிமையாக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களே எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் கோரி tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் இனி பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்டதையும் இணைய வழியிலேயே பார்த்து, பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை வழியாக, கட்டணமின்றி மக்கள் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…