தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் நிலையில், மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…