மகாராஷ்டிரா முதல்வர் போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை. அதற்கு காரணம் எம்.எல்.ஏக்கள் பேரம் பேசி கொண்டிருப்பதாக இந்து முன்னணித்தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போதுவரை நடந்துவருகிறது. இந்த பயணம் தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்,
தமிழகத்தில் இந்துக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவது இல்லை எனவே இந்துக்களின் உரிமை மீட்கப்பட வேண்டும். இந்த அரசு நான்கு ஆண்டு நீடிக்குமா மூன்றாண்டுகள் நடக்குமா என்று சொல்ல முடியாது. மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும். நேற்று மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா செய்து விட்டார்.
அது போல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை, அதற்காக எம்.எல்.ஏ களிடம் பேரம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் உளவுத்துறை மூலமாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் வருகின்ற 24 அல்லது 26 தேர்தல் ஆகட்டும் யார் இந்துக்களுக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு நல்ல காலம்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அதில், ஆடி மாதத்தில் பெண்கள் அம்மன் கோவில்களில் கூல் காய்ச்சி ஊற்றுவார்கள் அதற்கு அரசு சார்பில் இலவச அரிசி வழங்க வேண்டும். அது போல் விநாயகர் சதுர்த்தி அன்று தமிழக அரசு விநாயகருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். வங்கிகளில் கூட இந்துக்களுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது. அப்படி வழங்கினாலும் அவர்களுக்கு அதிகமான வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…