Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

புகைவிட்ட மாணவர்கள்.. தட்டிக் கேட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!

Sekar September 24, 2022 & 15:44 [IST]
புகைவிட்ட மாணவர்கள்.. தட்டிக் கேட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!Representative Image.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் புகை பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இருவர் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சில நாட்களுக்கு முன்பு, அப்பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடித்து, அங்கே வந்த மாணவியரின் முகத்தில் புகையை விட்டு கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் வெங்கடேசன், திலீப்குமார், நித்தியானந்தம் மற்றும் பாண்டியன் ஆகியோர் புகைப்பிடித்த மாணவரை அழைத்து விசாரணை நடத்தி அவர்களை கண்டித்துள்ளனர். அப்போது மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்த மாணவனின் பெற்றோர், ஆரணி போலீசில் ஆசிரியர்கள் தாக்கியதாக புகாரளித்தனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, சம்பந்தப்பட்ட பள்ளியில் புகார் பெட்டி வைத்து மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்டார். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நித்யானந்தத்தை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்