சென்னை: கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது அமைதி பூங்காவாகவும், தற்போது அமளி பூங்காவாகவும் மாறியுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது. ஆளும்கட்சி எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில் சாதாரண மக்களுக்கு எப்படி இருக்கும் என்று கேள்விக்குறியாகவுள்ளது. மூலகொத்தளம் குடிசை வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மூலகொத்தளம் குடிசை வாரிய கட்டிடம், அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காக கட்டப்பட்டதாகவும், அந்த வீடுகளை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவிற்கு பொருந்ததாது. திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அடுத்த 9மாதங்களில் எதுவேணாலும் நடக்கலாம். தோற்பவர்களுடன் யாரும் பயணிக்க விரும்ப மாட்டார்கள் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…