தீவிரவாத செயல்கள் மற்றும் தேச துரோக வழக்குகளில் தேடப்பட்டு வந்த பஞ்சாபை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான ஹர்தீப் சிங் (26) இவர் மீது பஞ்சாப் மாநில போலீசார் கடந்த 2020 ஆம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகளான 127 A உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அனால் இந்த ஹர்தீப் சிங் போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார், மேலும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் மாநில போலிஸ் டி.ஜி.பி, ஹா்ப்ரீத்சிங்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவா் மீது LOC போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஹர்தீப் வந்துள்ளார், அப்போது அங்குள்ள பாஸ்போர்ட் சோதனை செய்யும் இடத்தில பாஸ்போர்ட்டை கொடுத்துள்ளார், அப்போது அதில் இவர் 3 ஆண்டுகளாக தேடபடும் குற்றவாளி என காட்டுக்கொடுத்துள்ளது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் பஞ்சாப் மாநில பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து சென்னையில் பிடிபட்டிருப்பது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…