ஆசியாவிலேயே கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கிய முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இருப்பினும் கஞ்சாவை பொது இடத்தில் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கடுமையான தண்டனைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தாய்லாந்து சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல் கூறினார்.
ஒரு நேர்காணலில், அனுதின் சார்ன்விரகுல், கஞ்சாவை சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்வதை சட்டப்பூர்வமாக்குவதற்கான நடவடிக்கை பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்டது என்றார். எனினும் கஞ்சாவின் பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் சட்டவிரோதமானது என்றும் அவர் எச்சரித்தார்.
இதன் மூலம் இனி தாய்லாந்தில் மரிஜுவானா உள்ளிட்ட போதை தரும் செடிகளை வளர்ப்பது மற்றும் வர்த்தகம் செய்வது அல்லது நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துவது ஒரு குற்றமல்ல.
கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் கஞ்சா பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை வழங்கலாம், ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களில் 0.2 சதவீதத்திற்கும் குறைவான டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) மட்டுமே இருக்க வேண்டும். இது தாவரத்தின் முக்கிய உளவியல் கலவை ஆகும்.
எனினும் போதைப்பொருளாக கஞ்சாவை பொது இடங்களில் பயப்படுத்தினால், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், கடுமையான தண்டனைகள், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் பொது இடங்களில் கஞ்சா புகைப்பதற்காக $800 அபராதம் விதிக்கப்படும்.
தாய்லாந்தின் கஞ்சா தொழில் விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை வருமானமாக ஈட்டும் என்று அனுதின் நம்புகிறார்.
தாய்லாந்தின் கஞ்சா சட்டங்களை தளர்த்துவதில் நேற்று ஒரு வரலாற்று நாளாகும். முன்னதாக 2018 ஆம் ஆண்டில் மரிஜுவானாவை முதன்முதலாக மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது.
அதன்பிறகு, கஞ்சாவைச் சுற்றியுள்ள சட்டங்கள் மேலும் தளர்த்தப்பட்டன, நாட்டின் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா மொட்டுகள் மற்றும் பூக்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…