திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் 19வயதான சல்மான். இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த நிலையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்பி வந்த அவர், விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சால்மானுடன் விடுதியில் வசிக்கும் சக நண்பர்கள் மாணவன் அறைக்கு சென்றபோது சல்மான் தூக்கிட்டபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சால்மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
போலீசார் சோடிஹை செய்தபோது தற்கொலைக்கு முன்னர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார், அதில் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 5000 பணம் எனது அம்மாவிற்காக வைத்துள்ளேன் என்று தாய் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டும் வகையில் உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை போலீசார் பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…