Tirupati Latest News : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதிகள் 4 கிலோ 150 கிராம் மதிப்பில் உள்ள தங்க வைர நகைகளை நன்கொடை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் சென்னையை சேர்ந்த சூரியநாராயணன் மற்றும் சரோஜா தம்பதியர் தங்களது குடும்பத்துடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதனையடுத்து அந்த தம்பதிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த 4 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்க மற்றும் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்ட காசுமாலை மற்றும் செயினை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினர். இதன் மதிப்பு 2 கோடியே 45 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தங்க நகைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இந்த தங்க நகைகளை பெற்றுக்கொண்ட தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏழுமலையானின் தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கினார். மேலும், இந்த ஆபரணங்கள் விரைவில் மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…