கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.தம்பதிக்கு திருமணம் தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
திருமண கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்த மணமகன் திடீரென லேசான நெஞ்சுவலி காரணமாக இருக்கையில் மாறுவதும் எழுவதுமாக இருந்தார். அப்போது உறவினர்களிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் அஜீரணம் காரணமாக இருக்கலாம் என கூறி சோடா கொடுத்துள்ளனர். அதனை குடித்த அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு அந்த கிராமத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ரத்த அழுத்தம் கம்மியாக உள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார். பின்னர் ஆவாரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வலையில் உயிரிழந்தார்.
திருமணம் நடந்து முடித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…