மும்பையில் நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடைமேம்பாலத்தில் ஆட்டோவை டிரைவர் ஓட்டிச்சென்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தை உணராமல் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற ஓட்டுனருக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மேம்பாலத்தின் மீது ஆட்டோவை ஓட்டி சென்ற ஓட்டுனர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆட்டோவை ஓட்டிச்சென்ற நடைமேம்பாலம் மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும், இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், " நடைமேம்பாலத்தில் பொது மக்கள் ஏற வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாய்வு பாதை வழியாக நடைமேம்பாலத்தில் ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும், அந்த ஆட்டோ டிரைவரை தேடி வருகிறோம் " என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…