India : ஒரு நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது முன்னாள் ஆசிரியரை சந்தித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றார். அங்கு அவர், “நீராலி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை” திறந்து வைத்தார். இந்நிலையில் தனது முன்னாள் பள்ளி ஆசிரியர் ஜெகதீஷ் நாயக் என்பவரை சந்தித்தார். குஜராத் மாநிலம் வட்நகர் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது பிரதமர் மோடிக்கு பாடம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் மோடி அவரது முன்னாள் ஆசிரியர் ஜெகதீஷ் நாயக்கை சந்தித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடியின் முன்னாள் ஆசிரியர் ஜெகதீஷ் நாயக், " இந்த சந்திப்பு சிறிது நேரம் என்றாலும், இதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பிரதமர் மோடி என் மீது உள்ள அதே மரியாதையுடன் நடந்து கொண்டார்" என தெரிவித்தார்.
மேலும், ஆசிரியரின் பேரன் பார்த் நாயக் கூறுகையில், “எனது தாத்தா ஜெகதீஷ் நாயக் பிரதமர் மோடியை சந்திக்க விரும்பினார். அதனால் நான் பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு இது தொடர்பாக பேசினேன். ஆனால், எங்களை வியப்பூட்டும் விதமாக பிரதமர் மோடியே நேரடியாக தொடர்புகொண்டு பேசினார். இன்று அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் மிகவும் எளிமையாக நடந்துகொண்டார். மேலும், அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…