தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பில் இருந்த வழக்கை தற்போது விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கையை முன்வைத்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுகவின் ஒற்றை தலைமைப் பதவியை பிடித்து உள்ள எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுக கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…