Politic News : தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுசெயலாளராக பொதுக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக கட்சி அலுவலகத்தை கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி அலுவலகங்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை அதிமுகவினர் அகற்றி வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்ட அதிமுக அலுலவகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், ஓபிஎஸ் புகைப்படங்களை எடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதை பொதுவெளியில் போட்டு மிதித்தனர். அப்போது ஓபிஎஸ் புகைப்படத்தை மிதிக்கும் போது தொண்டர் ஒருவர் வழுக்கி விழுந்தார்.
மேலும், ஓபிஎஸ் புகைப்படத்தை செருப்பால் அடித்து அவமரியாதை செய்தனர். இச்சம்பவம் மேலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…