சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் , ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் ஒருவரையொருவர் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தக்குதலுக்கு மத்தியிலும் ஒ.பன்னீர்செல்வம் ரத்தக்கறை படிந்த வாகனத்தில் அதிமுக அலுவலகம் சென்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக அலுவலத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், அதிமுக தலைமையகத்திற்குள் கூடியிருப்பது சட்டவிரோதம் என கோட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…