தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது திருமணம் செய்த கணவரை கம்பத்தில் கட்டிவைத்து, செருப்பால் அடித்தது மட்டுமல்லாமல், செருப்பு மாலை அணிவித்து தண்டித்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாந்தனி அடுத்த ஸ்வர்ணபள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த அகிலாவுக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துகு ரூ.20 லட்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஒரு மகனும் பிறந்துள்ளார். ஆனால் மகன் பிறந்த பிறகு அகிலாவை விட்டு ஸ்ரீகாந்த் பிரிந்து சென்று விட்டார். பின்னர் ஸ்ரீகாந்த், வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த விஷயம் அகிலாவுக்கு தெரியவர, அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்தை ஹன்மகொண்டாவில் இருந்து ஸ்வர்ணபள்ளிக்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர் ஸ்ரீகாந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்து அகிலா ஆத்திரத்தை போக்கிக் கொண்டார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ஸ்ரீகாந்தை மீட்டு, முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…