தெலங்கானாவில் 25 வயது ஜெய்ஸ்ரீ என்ற பெண் தனது இரண்டு மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ பிரசாத் என்ற தம்பதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்ரீக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஜெய்ஸ்ரீக்கு ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதால் மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து, ஜெய்ஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது திடிரென தாய்ப்பால் கொடுக்கும் போதே ஜெய்ஸ்ரீ உயிரிழந்துள்ளார்.
இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஜெய்ஸ்ரீ மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…