நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட எம்பிக்கள் சுமார் 50 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ள நிலையில், டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியை சேர்ந்த 20 எம்பிக்களை மாநிலங்களவை சபாநாயகர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சஸ்பென் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வாளாகத்திலையே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எம்.பி.க்களில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 பேர், திமுகவில் இருந்து 6 பேர், தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் (டிஆர்எஸ்) 3 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 பேர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஒருவர் அடங்குவர்.
நேற்றைய தினம் (புதன்கிழமை) திமுக எம்பி திருச்சி சிவா ஏற்பாடு செய்திருந்த காலை உணவாக எம்பிக்கள் இட்லி-சாம்பார் சாப்பிட்டனர். மதிய உணவு தயிர் சாதத்தையும் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இரவு உணவிற்கான மெனு ரொட்டி, பருப்பு, பனீர் மற்றும் சிக்கன் தந்தூரி, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் வழங்கினர். பட்டியலைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்காற்றிய திமுகவின் கனிமொழி, 'கஜர் க ஹல்வா' ஏந்தி போராட்டப் பகுதிக்கு வந்தபோது, தி.மு.க.வினர் பழங்கள் மற்றும் சாண்ட்விச்களுக்கு ஏற்பாடு செய்தனர்.
இன்று காலை உணவுக்கு திமுகவும், மதிய உணவிற்கு டிஆர்எஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இரவு உணவிற்கும் பொறுப்பேற்றுள்ளனர். எம்.பி.க்களை கொளுத்தும் வெயிலில் இருந்து காப்பாற்றுவதற்காக கூடாரம் அமைக்கும் பொறுப்பு ஆம் ஆத்மிக்கு இருந்தது, ஆனால் அதற்கு அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவிற்காக இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…