தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக. நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக cஎன்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…