Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு திட்டங்களில் அரசியல் நோக்கம் இல்லை: அமைச்சர் சாமிநாதன் விளக்கம்...!

Baskarans Updated:
அரசு திட்டங்களில் அரசியல் நோக்கம் இல்லை: அமைச்சர் சாமிநாதன் விளக்கம்...!Representative Image.

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி உட்பட அனைத்து திட்டங்களும் மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரக்கூடியவை என்றும், இதில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என்று அமைச்சர் சாமிநாதன் தெரவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில் வழி பேருந்து நிலையம் ரூ.26 லட்சத்தில் புதுப்பிக்கப்படுவதற்கான பணி மற்றும் நடராஜ் திரையரங்கம் அருகே ரூ.14 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு வசதிகளை கொண்டதாக கோவில் வழி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுவதாகவும், அதேபோல் திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நடராஜ திரையரங்கம் அருகே 14 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படுவதாகவும் இவை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திமுக முத்திரை கொடுக்கப்படுவதாக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமானாலும், மக்கள் வரிமாணத்தில் செய்யக்கூடிய பணிகள் எனவும் இதில் எந்த வித அரசியல் முத்திரை குத்தப்படுவதற்கான நோக்கம் கிடையாது எனவும், நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு அனைவருக்குமான சமநிலை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்